3.3.09

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...




கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.

‘குற்றவாளி இ.ஆ.ப (IAS) தேர்வில் தேர்ச்சி பெற்றதால், பலாத்கார வழக்கின் குற்றவாளியின் தண்டனையை 5 1/2 ஆண்டுக் காலமாக தில்லி உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது’ என்ற வகையிலே பத்திரிக்கை தலைப்புகள், ஏன் செய்தியே வெளியிடப்பட்டது.

நேற்று ‘இந்து’வில் கூட அதிர்ச்சி (shocking) ஏற்ப்படுத்தக்கூடியதாக உள்ளது என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி அலைகள் யாவும், ஒரு குற்ற வழக்கில் தண்டனையளிக்க நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தினை (jurisdiction & discretion) சரிவர ஆராயமல் ஒரு தீர்ப்பினை புரிந்து கொள்ள முயல்வதால் ஏற்ப்படுவது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர் 21 வயது நிரம்பிய பெண். குற்றவாளி 29 வயது நிரம்பிய ஆண். தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். பின்னர் தான் வாக்களித்தபடி அந்தப் பெண்ணை திருமணம் செய்யாதலால், விரிவாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கிறார். கீழமை நீதிமன்றம் தற்கொலைக்கு தூண்டுதல், மற்றும் பாலியல் பலாத்காரம் என்ற இரு குற்றங்களுக்காக, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உயர்நீதிமன்றம் வழக்கின் முழு விபரத்தை அறிந்து குற்றவாளி பாதிக்கப்பட்டவருக்கு ஏற்ப்பட்ட மன உளைச்சலை ஏற்ப்படுத்தியதைத் தவிர தற்கொலையினை நேரடியாக தூண்டவில்லை என்று கூறி தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்துள்ளது. பின்னர் நடந்து ‘பாலியல் பலாத்காரம்’ என்ற பிரிவில் ஆராய்ந்து சற்றுத் தயக்கத்துடனே குற்றவாளி என்று தீர்மானித்துள்ளது.

தீர்ப்பில் இருந்து பார்க்கையில், பாதிக்கப்பட்டவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதமே (suicide note) இந்த வழக்கின் முக்கிய ஆவணமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அந்தப் பெண் தெள்ளத் தெளிவாக சிந்தித்து, குற்றவாளியை தப்பிக்கவே முடியாத வகையில் சிறைக்குள் தள்ள வேண்டுமென்ற முடிவோடு எழுதியுள்ளது போலத் தெரிகிறது. மற்றொரு நபரின் ஆசைக்கும் இணங்க வற்புறுத்தியதாக கூறியது மட்டும் அந்தக் கடிதத்தில் இல்லையெனில், காதலித்து ஏமாற்றியது என்ற வகையோடு இந்த தவறு நின்றிருக்கும். ஆயினும், இவ்வளவு தெளிவாக மற்ற விடயங்களை எழுதிய அந்தப் பெண், யார் அந்த மூன்றாவது நபர் என்ற விடயத்தை எழுதாமல் விட்டது, அதன் உண்மைத் தன்மையை பற்றிய சந்தேகத்தினை எழுப்புகிறது.

கடிதத்தில் ‘I had to attend to that person and make him happy’ என்று இருப்பினும் வற்புறுத்தப்பட்டார் என்ற அளவிலேயே அரசின் வாதமும் அமைந்தது.

ஆயினும் நீதிபதிகள், குற்றவாளிக்கு முதலிலிருந்தே அந்தப் பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்ற அடிப்படையில் நடந்தது பாலியல் பலாத்காரம் என்று தீர்மானித்துள்ளார்கள். இதுவும் எவ்வளவு தூரம் இதச பிரிவு 375ன் கீழ் வருகிறது என்று தெரியவில்லை.

மேற்கண்ட விடயங்கள், இரு தரப்பினரின் வயது போன்றவற்றை ஆராய்ந்த நீதிபதிகள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை என்பது மிக அதிகம் என்று தீர்மானித்து, அவர் அது வரை சிறையில் கழித்த 5 1/2 ஆண்டுகளை மட்டும் போதுமானது என்று அவரை விடுதலை செய்துள்ளனர்.

நீதிபதிகள் பாலியல் பலாத்காரத்திற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆயினும், குற்றவாளிக்கு சிறையில் அளிக்கப்படும் தண்டனைக் குறைப்பு (remission) போன்றவற்றை அனுசரித்தே 5 1/2 ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

தீர்ப்பினை முடிக்கும் முன்னர், சிறையிலும் தண்டிக்கப்பட்டவர் நல்ல முறையில் நடந்து கொண்டார் என்பதை எடுத்துக் காட்டவே அவர் இஆப தேர்விலும் தேறியுள்ளார் என்று போகிற போக்கில் குறிப்பிடுகிறார்கள்...அவ்வளவுதான், அந்த ஒற்றை வரி ‘ஏதோ இஆப தேர்வில் தேறினால் தண்டனைக் குறைப்பு, அதுவும் வன்புணர்வு குற்றவாளிக்கா?’ என்று கண்டனத்தை ஏற்ப்படுத்தி விட்டது.

தண்டனை எவ்வளவு என்பதை கணிதம் (mathematical precision) மூலம் கூற முடியாது. வழக்கு விசாரணையில் நீதிபதியும் முன் வைக்கப்படும் பல்வேறு காரணிகளை ஆய்ந்து, அவை நீதிபதியிடம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தினைப் பொறுத்து அமைவது. அவையனைத்தையும், தெளிவாக தீர்ப்பில் கூற முடியும் என்பதும் இயலாதது. எனவே இவ்விதமான ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள், நீதிபதிகளை தட்டையான தீர்ப்பினைக் கூறும் இயந்திரங்களாக மாற்றி விடக்கூடும்!

நீதிபரிபாலனம் என்பது மூளை மட்டும் சார்ந்த விடயமல்ல...இதயத்திற்கும் கொஞ்சம் பங்கு உண்டு!

மதுரை
03.03.09


நேற்று இந்துவில் வெளிவந்த கடிதத்திற்கு நான் எழுதிய எதிர்வினை...



It is unfair on the part of the press to criticize the Delhi High Court, for its judgment, reducing the sentence of Ashok Rai, convicted for the offence of rape. It seems no one, including your reader who expressed shock in his letter published on 02.02.09 bothers to read the judgment before pouring vitriol on the Learned Judges, who only after weighing the entire circumstances of the case, in their wisdom thought fit to release the convict after 5 ½ years of incarceration. The much maligned observation on the ‘convict qualifying for IAS’ is made only as a passing reference at the end of Judgment to bolster the point that the convict had shown good conduct while in jail. It is another matter whether he is fit or legally entitled to work as a civil servant or not.

Instead, what weighed most in the mind of the Learned Judges was that what had happened between the victim and the culprit was not technically rape but a consensual sex, obtained on a false promise of marriage. The culprit was aged 29 and the victim 21 and had she exhibited a little more strong will, she could have succeeded in bringing the culprit into book, without losing her life. The way in which the suicide note was written, creates a suspicion in my mind that the victim, in a fit of rage and spirit of revenge has laid a well thought out plan to send the cheater for a long period behind the bars. Well, 5 ½ years is not a small period but still the Learned Judges could have stuck to the minimum period of 7 years and leaving the remission period to the concerned authorities.

In any case, it is not correct that convict’s qualifying for IAS was not cited by the Delhi High Court as the only reason for reducing the sentence.

8 comments:

புருனோ Bruno said...

//வழக்கம் போலவே இதனைப் பற்றிய செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள்தான் காரணம்.//

பல சாதாரண விஷயங்களை பெரும் சர்ச்சை ஆக்குவது பத்திரிகைகளின் தவறான "Reporting" தான்

சமீபத்திய உதாரணம் -> 1. நாட்டுடைமை குழப்பம்.

அதற்கு முன் என்றால் உடனடியாக ஞாபகத்திற்கு
1. மருத்துவ மாணவர்களுக்கான கட்டாய திட்டம்

புருனோ Bruno said...

//தன்னிடம் பாடம் படிக்க வந்த பெண்ணை தனது ‘ஆசை வார்த்தைகளால்’ மயக்கி பலமுறை உடலுறவு கொண்டிருக்கிறார். //

இது போன்ற தவறுகள் ”Rape” என்பதன் கீழ் விசாரிக்கப்பட வேண்டுமா

இது “வல்லுறவு” அல்லவே !!

against will against consent என்ற இரு criteriaவும் இங்கு இருப்பது போல் தெரியவில்லை.

ஒரு முறை என்றால் கூட ப்ரவாயில்லை. பல முறை என்ற போது இந்த வழக்கை RAPE என்று சுருக்குவது 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தம் தானா

புருனோ Bruno said...

// இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். //

இது immoral trafficking கீழ் வராதா

PRABHU RAJADURAI said...

// இடையில் தனக்கு ஏதோ காரியம் ஆக வேண்டுமென்று வேறு ஒரு ஒருவரின் ஆசைக்கும் இணங்கச் சொல்லியிருக்கிறார். //

இது immoral trafficking கீழ் வராதா

Firstly, there is no evidence or material, except a vague statement in the suicide note

பத்மா அர்விந்த் said...

பிரபு
இங்கே நடக்கு சில வழக்குகளில் இதுபோன்ற நிலையில் அந்த பெண்ணின் ஒப்புதல் இருந்ததா இல்லையா என்பதே சந்தேகத்துக்கிடமின்றி தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. ஆகையால் பொதுவாகவே வன்புணர்வு வழக்குகளில் மிகக்குறைந்த அளவே தண்டனையில் முடிகின்றன. பெண் தற்கொலை செய்துகொண்டபோது எழுதிய கடிதம் அவரின் மனநிலை எப்படி இருந்தது என்பதெல்லாம் தெரிவாக தெரியாத நிலையில் எப்படி முழு ஆதாரமாக முடியும்? அவருக்கு ஏற்பட்ட உடல் காயங்கள் ஓரளவிற்கு பிரேத பரிசோதனையில் சில அளவுக்கு தெரிவிக்க முடியுமே தவிர, சந்தேகத்துக்கு இடமின்றி எப்படி தீர்ப்பு சொல்ல முடியும். இந்த வழக்குகளில் 18 வயதுக்கீழ் ஆணோ பெண்ணோ இருக்கும் போதுதான் தண்டனை மிக கடுமையாக இருக்கும். தீர்ப்பு முழுதும் படித்து தெரிந்துகொள்ள அவை இன்னமும் எளிமையாக எழுதினால் நலமாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதெல்லாம் என்போன்றவர்களுக்கு சுத்தமாகப் புரிவதில்லை.

இனிமேல் எதிர் பாலருடன் பேசுவதற்கே பயப்படும் சூழல்தான் உருவாகிறது. உண்மை நிலவரம் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பது தெளீவாக புலப் படாத நிலையில் நீதிக்குப் பதிலாக பீதியே இருந்து கொண்டிருக்கும்

chennaivaasi said...

Again, a nice post with lucid explanations. I am really wondering how your arguments in court would be. Also, I can see your disappointment as an undercurrent on some newspapers misinterpreting the case for sensation.

Frontline is carrying a full article on this issue.

Prabhu - How about an article on the Gopalswami Vs Navin Chawla & the handling of this issue by N. Ram. I am really eager to read your thoughts.

Boston Bala said...

mmmmmm!